பாலையா உடனான சர்ச்சைக்குள்ளான நடன அசைவுகள் குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தெலா விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்: இயக்குநர் பாபி இயக்கத்தில், பாலையா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்கூ மஹாராஜ். இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தில் பாலையா உடன் நடிகை ஊர்வசி ரவுத்தெலா நடனமாடிய பாடல் ஒன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதேநேரம், அந்த நடன அசைவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அப்படம் வெளியானவுடன் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பாலையா, ஊர்வசி ஆகிய இருவரும் அதே மாதிரி நடனமாடினார்கள். இந்த வீடியோ வைரலாகி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுத்தெலா அளித்துள்ள விளக்கத்தில், “பாலையா உடன் ஆடுவது தொடர்பாக எந்த ஒரு பெர்பார்மன்ஸ் ஆக இருந்தாலும், அது குறித்த பலதரப்பட்ட கோணங்களை நான் மதிக்கிறேன். அவரைப் போன்ற ஒரு ஆளுமையுடன் பணிபுரிவது மிகப்பெரிய ஒரு கெளரவம்.
அந்த அனுபவம் என்பது ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கலையின் மீதான ஆர்வமே. பாலையா உடன் அந்த நடனம் என்பது, என்னைப் பொறுத்தவரை வெறும் பெர்பார்மன்ஸ் மட்டுமல்ல, அது கலை, கடின உழைப்பு மற்றும் கலை மீதான மரியாதை.
இதையும் படிங்க: தள்ளாடும் வயதில் மானாட மயிலாட பார்த்தவர் கலைஞர் : செல்லூர் ராஜூ விமர்சனம்!
மேலும், அவருடன் பணிபுரிவது என்பது எனக்கு ஒரு கனவு. ஒவ்வொரு ஸ்டெப்பும், ஒவ்வொரு அசைவும் அழகான ஒரு விஷயத்தை உருவாக்குகின்றது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஊர்வசியின் இந்த விளக்கத்தையும் இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.