நல்லா தேடுறாங்கய்யா ‘பப்ளிசிட்டி’.. ரிஷப் பண்ட் விபத்திற்கு பின் நடிகை போட்ட பதிவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிக்கிய போது, அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொகுசு காரின் மூலம் உத்தரகாண்ட்டில் உள்ள ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும், தாயாருக்கு சர்ப்பைரஸ் கொடுக்கும் நோக்கில், காரை பண்ட்டே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் திடீரென்று கட்டுப்பாட்டை கார் இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டின் தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார்.

காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரிஷப் பண்டை சூசகமாக குறிப்பிடும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிவில் ஊர்வசி ரவுடேலா ‘பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரவுடேலாவின் இந்த பதிவு ரிஷப் பண்டை தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு ஊர்வசி ரவுடேலா முன்பு ரிஷப் பண்டை மறைமுகமாக கேலி செய்து பல பதிவுகளை போட்டு வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த அவர் தன்னை சந்திப்பதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு மேலாக என்னை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் தூங்கி எழுந்து இப்போது அவரை சந்திக்க முடியாது மும்பை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொன்னேன் என்று கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் பெயரை குறிப்பிடாமல் RP என்று மறைமுகமாக அவரைப் பற்றி கூறி பேட்டி கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து மற்றொரு பதிவில் தம்பி போய் பந்து விளையாடு என்று வடிவேலு தோனியில் கலாய்த்திருக்கிறார். இந்த பதிவு ரிஷப் பண்ட் ரசிகர்களே கோவத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருக்கும் நிலையில் ஊர்வசி போட்டு இருக்கும் இந்த சூசக பதிவை கண்டு ரசிகர்கள் பலரும் ஒருவரின் இந்த நிலையில் கூட அவரை வைத்து விளம்பரம் தேடுவது கேவலமாக இருக்கிறது என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

8 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

8 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

9 hours ago

This website uses cookies.