2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்” நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதன்படி “வாடிவாசல்” என்ற டைட்டிலோடு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடாமலே இருந்தது. சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என ஒரு பேட்டியில் தாணு கூறினார்.
ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தாணு அறிவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆகஸ்து மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.