இன்னொரு வாட்டி என்ன மாதிரி நடிச்ச…. பிரபல நடிகரை ஆள் வச்சி அடித்து கொலை மிரட்டல் விடுத்த வடிவேலு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது. அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.

இதனால் வடிவேலுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவி விட்டு ஒதுங்கியே இருந்தார். மேலும் தன்னுடன் நடிகர் நடிகர்களை வளரவிடாமல் கொடுமைப்படுத்தியதாக பலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் தற்போது பிரபல காமெடி நடிகர் காதல் சுகுமார் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் ஒரு பரபரப்பான சம்பவத்தை கூறி பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது, வடிவேலு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நான் வடிவேலு சார் மாதிரி ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த காமெடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின் ஒரு நாள், வடிவேலு சார் அந்த காமெடி பார்த்துவிட்டு என்னை அழைத்துவர சொல்லி முத்துக்காளை, போண்டா மணி ஆகியோரை அனுப்பி வைத்தார்.

நானும் சந்திசோஷமாக வடிவேலு சார் பார்க்க போனேன். முதலில் என் நடிப்பை பாராட்டிய அவர் “என் வயித்துல பொறந்தவன் மாதிரி இருக்கான்னு என் ஆத்தா சொல்லுவாங்க, என்று வடிவேலு என்னிடம் சொன்னாரு. பின்னர் அங்கிருந்த போண்டாமணி, முத்துக்காளை ரெண்டு பரையும் வெளியில் போக சொல்லிவிட்டு ” ஒவ்வொரு கம்பெனியா போய், என்னை மாதிரி நடிப்பேன்னு சொல்றியாமேன்னு கேட்டாரு . சினிமாவுல நடிக்கமாட்டேனு சொல்லிட்டு நடிக்குற என பேசிக்கொண்டே பின்னாடி இருந்து ஒருவர் அடித்தார்.

நான் என்ன? என்று கேட்டதும் எதிர்த்து பேசுறியான்னு அடிச்சாங்க ஏதோ திட்டமிட்டு பண்ண பாக்குறாங்க என்று நினைத்து நான் இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டேன் விட்டுவிடுங்கள் என பயந்து ஊருக்கே ஓடிவிட்டேன். பின்னர் படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துக்கொள்ளலாம் என நினைத்தேன் என் மனைவி தான் எனக்கு ஆறுதலாக இருந்தார் என காதல் சுகுமார் கூறியுள்ளார். தன்னை போல் நடித்தார் என்பதற்காக வடிவேலு இவ்வளவு மோசமாக நடந்துக்கொண்டாரா? என கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது.

Ramya Shree

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.