சோறு போட்ட தெய்வம் அவரு.. பிரபல நடிகர் குறித்து எமோஷனலாக பேசிய வடிவேலு..!

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், முன்னணி நடிகையாக திகழ்ந்த அம்பிகா மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் வாய்ப்புக்காக கேட்டுள்ளார். அந்த சமயத்தில், அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டதால் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல், கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்னை வீட்டிற்கு கூட்டிச் செல்வாராம். மேலும், சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில் ப்ரியா பவானி சங்கர், ஸ்ரேயா சரண், ஷிவானி போன்ற நடிகைகளும் இந்த லிஸ்டில் இருப்பதாகவும் கூறி பதற வைத்திருக்கிறார்.

இப்படியாக நடிகர் வடிவேலு குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், வடிவேலு தன்மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

அதாவது, நடிகர் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் தான் என்பதை அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால், ராஜ்கிரனை வடிவேலு மதிப்பதில்லை என்ற விமர்சனம் காலங்களாக வடிவேலு மீது முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜ்கிரன் தான் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதில், என்னுடைய தாய் தந்தையருக்கு பின் எனக்கு உணவு கொடுத்ததும் ராஜ்கிரன் தான் என மிகவும் உருக்கமாக வடிவேலு பேசிய இந்த விஷயம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.