மன்னிப்பு கேட்ட போண்டா மணியை நெஞ்சிலே மிதித்த வடிவேலு.. கேவலமான வேலையை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.

சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து அவரை காப்பற்றினர். இது குறித்து பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போண்டாமணி தனக்கு உதவி செய்தவர்களின் லிஸ்ட்டை கூறி நன்றி தெரிவித்தார். போண்டா மணியின் நிலையை அறிந்து மனோபாலா, பார்த்திபன், தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பினார்.

ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் அவரை கண்டுகொள்ளாமல் தலையைக்கூட காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி வீட்டிலே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உறுதி செய்து இருக்கிறார்கள். அவரது மறைவிற்கு பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் போண்டாமணி அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் இணைந்து நடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த சமயத்தில், மிகப்பெரிய அளவில் வடிவேலு சிங்கமுத்து பிரச்சணை ஓடிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட நேரத்தில், போண்டாமணி கூறியது பெரும் தலைப்பாக முன்னணி பத்திரிகைகளில் வெளியானது. எதார்த்தமாக கூறிய இந்த விஷயத்தை படித்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு போன் செய்து போண்டாமணியை உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி வடிவேலு திட்டி உள்ளார். இதனால் வடிவேலுவுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு பறிபோய்விடுமே என நினைத்த போண்டாமணி உடனடியாக கிளம்பி வடிவேலுவின் வீட்டிற்கு அதிகாலை 6 மணிக்கு சென்றுள்ளார்.

காலை 6:00 மணிக்கு சென்ற போண்டா மணி இறுதியாக 10 மணிக்கு வடிவேலுவை சந்தித்துள்ளார். வடிவேலுவை பார்த்தவுடன் ஓடிப்போய் நான் செய்தது தவறு என்னை அண்ணா மன்னித்து விடுங்கள் எனக்கு கூறி போண்டாமணி வடிவேலுவின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார். காலில் விழுந்த நடிகர் போண்டாமணியின் நெஞ்சில் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார் வடிவேலு. இப்படி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளார். இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது பகிர்ந்து உள்ளார்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

12 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.