கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த மாரி செல்வராஜ், இரண்டாவதாக தனுஷை வைத்து கர்ணன் என்கிற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருவதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தையும் இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியனாக நடிக்கின்றார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு தற்போது கலந்துகொண்டுள்ளார். அவரை படக்குழுவினர் மாலை மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தில் பழைய கிராமத்து லுங்கி கெட் அப்பில் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி அனைவரது கவனத்தைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.