தன் சினிமா வாழ்க்கையை மட்டும் விடவே மாட்டேன் என்று இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் இரண்டாது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் நடிகர் வடிவேலு. என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் புதிதாக அறிமுகமாகி வருகிறார்கள். முக்கியமாக சினத்திரை மூலமாக பல பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள்.
இப்படி என்னதான் கடந்த பத்து வருடங்களில் புது புது காமெடி நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கல் என்று சொன்னால் அது ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொலல் வேண்டும். தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி மூலம் நகைச்சுவை செய்து அசத்தியவர் வைகைப்புயல் வடிவேலு.
வடிவேலு 12 செப்டம்பர் 1970 அன்று தமிழ்நாட்டின் மதுரையில் நடராஜன் மற்றும் வைத்தீஸ்வரிக்கு மகனாக பிறந்தார். அவர் தனது தந்தையின் கண்ணாடி வெட்டும் தொழிலில் வேலை செய்தார் மற்றும் அவரது தந்தை இறந்த பிறகு தனது சகோதரர்களுடன் அதைத் தொடர்ந்தார்.
அவரது ஓய்வு நேரத்தில், அவர் உள்ளூர் மேடை நாடகங்களில் பங்கேற்றார், பொதுவாக நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார். வடிவேலு சரோஜினி என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர், மகள்கள் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி, மற்றும் ஒரு மகன், சுப்ரமணியன்.
சமீபத்தில் தான் நடிகர் வடிவேலு நாய் சேகர், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படங்கள் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு நடிப்பில் கடைசியாக சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் மகள் திருமணத்தில் எடுத்துக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கிலோ கணக்கில் மகள் நகைகள் அணிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இத்தனை ஆண்டுகால பயணத்தில் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று தெரிவிக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இது தான்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.