தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கொடுத்து… புத்தாடைகளை வாங்கி கொடுத்து உதவிய கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை வடிவேலு.
திரைத்துறையில் வெறுக்கப்படும் பிரபலமாக வடிவேலு தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்த கேள்விக்கு, ” வடிவேலுக்கு யாரு கை தட்டுறாங்களோ அவங்கள தான் கூட வச்சிப்பாரு” அவருக்குனு ஒரு கேங்க் இருக்கு அவங்கள தவிர யாரும் அவருடன் நடிக்க முடியாது.
ஆனால், விவேக் சார் அப்படி இல்லை. யாரையும் பிரிச்சி ஒதுக்கவே மாட்டார். அவங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு நம்ம பிரிச்சி ஒத்துக்கிட்டா அவன் குடும்பத்துக்கு எப்படி பசி ஆற்றுவான் என நினைப்பார். வடிவேலு பொறுத்தவரை அவரை விட யாரும் சிறப்பாக நடித்துவிடக்கூடாது. மீறி நடித்தால் ரீடேக் சொல்லிவிட்டு அந்த நபரை அடித்து பின்னால் போய் நிற்க சொல்லுவார் இது தான் வடிவேலு என தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார் கொட்டாச்சி. திரைத்துறையில் அனைவரும் கெட்டவன் என்று கூறியது வடிவேலுவாக மட்டும் தான் இருக்க முடியும்.
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
This website uses cookies.