தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த் பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார்.
கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை வடிவுக்கரசி விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். விஜயகாந்த் மனுஷனே கிடையாது அவர் ஒரு மாமனிதன் என்றும், எல்லா விதத்திலும் அவர் நல்லவர்.
பணம் பணம் என்று இருக்க மாட்டார் எனவும், தான் படம் தயாரிக்க நினைக்கும் போது மோகனுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு அவரை நடிக்க வைங்க என்று அடுத்த நடிகர்களை கூட சிபாரிசு செய்யும் பெருந்தன்மை விஜயகாந்த்திடம் இருந்ததாகவும், நீங்களே டேட் கொடுங்கன்னு சொல்லியும், மோகன்கிட்ட போங்கன்னு சொன்னாரு ஆனால், விஜயகாந்த் சார் ஓகே சொல்லி படம் ஆரம்பிச்சது.
விஜயகாந்த் எந்த நேரத்திலும் எல்லோருக்கும் உதவும் நற்குணம் படைத்தவர் போங்கு ஆட்டம் ஆடி ஜெயித்து இல்லாதவர்களுக்கு கூட கொடுத்திருக்கிறார். இனி அவரைப் போல் யாரு வருவாங்கன்னு தனக்கு தெரியாது என்று வடிவுக்கரசி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும், விஜயகாந்தை பார்க்கணும் என்று பலமுறை முயற்சி செய்தோன். அவரைப் பார்க்க முடியவில்லை என்றும், பின்னர் அவரை பார்க்க வைத்த போது பேசக்கூடிய நிலையில் அவர் இல்லை என்று உருக்கமாக விஜயகாந்த் குறித்து வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.