சினிமா / TV

துப்பாக்கி பிடுங்கி….தந்திரமாக தளபதி இடத்தை பிடிக்க பார்க்கும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் “கோட்”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள் .

மேலும் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா ,மோகன் ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு பல வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா விஜயின் படத்திற்கு இசையமைத்திருந்தார் .

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேமியோ நடித்திருப்பார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. காரணம் அந்த காட்சியில் துப்பாக்கியை பிடிங்கி சிவா இனிமேல் எல்லாம் உங்க கையில தான் இருக்கு என்று விஜய் வசனத்தை சொல்லிவிட்டு செல்ல அதற்கு சிவா இதைவிட பெரிய வேலை எதுக்கோ நீங்க போறீங்க இதை நான் பார்த்துகிறேன் அதை நீங்க பாருங்க சார் அப்படின்னு சொல்லுவாரு.

சிவகார்த்திகேயன் பேசிய இந்த வசனத்திற்கு விஜய் கைகாட்டி விட்டு செல்வார்.. விஜய் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே இந்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. காரணம் சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி விஜய் என்று இந்த காட்சியின் மூலம் விஜய் சொல்லி இருப்பார் என பலரும் தெரிவித்து வந்தனர் .

தற்போது இந்த காட்சி குறித்து பேசி இருக்கும் வலைப்பேச்சு அந்தகன்… வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் வைத்து அடுத்ததாக ஒரு படத்தை எடுக்க போகிறார். இதனால் கோட் படத்தில் அவருக்கு ஒரு காட்சி வைத்தால் அடுத்த படத்திற்கு ஒரு பெரிய பிரமோஷன் ஆகவும் விளம்பரமாகவும் அமையும் என்று நினைத்துதான் அந்த காட்சியில் சிவகார்த்திகேயன் நடிக்க வைத்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இப்படி ஒரு காட்சி இருக்கு என்று அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று சொன்னது எல்லாமே இயக்குனர் வெங்கட் பிரபு தான். அப்படி இருக்க விஜய் இந்த வசனத்தை வையுங்கள்…இந்த நடிகரை போடுங்க என்று சொல்லவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு அந்த காட்சியை பார்த்த பிறகு விஜய் சினிமா கெரியரை மொத்தமாக சிவகார்த்திகேயன் கையில் கொடுத்தது போல ஒரு பில்டப்பை சிவகார்த்திகேயனே உருவாக்கிக் கொண்டார்.

அதுதான் சிவகார்த்திகேயனிடம் இருக்கும் தந்திரம். இதனால் தான் ரஜினி கமல் போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற நடிகர்களை தங்களது படத்தில் சேர்ப்பது கிடையாது. தனுஷ் பல வருடங்களாக ரஜினியுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் .

மருமகனாக இருந்தும் கூட ரஜினி அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் ரஜினி அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நன்றாக தெரிந்த பெரிய ஹீரோக்கள் இதனால் தான் வளர்ந்து வரும் நடிகர்களை தங்களது படத்தில் போடவே மாட்டார்கள் என கூறுவது கூறினார் அந்தகன். எனவே இந்த அடுத்த தளபதி விஷயத்தை சிவகார்த்திகேயன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட விளம்பரம் என அந்தகன் அந்த பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.