தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மறைந்த மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். பின்பு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்த நிலையில் அவரைப் பிரிந்தார்.
இதனிடையே, வனிதா இரண்டாம் முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். இதில், முதல் கணவரிடம் ஆகாசும் மகள் வனிதா உடன் மற்றொரு மகளும் அவரது முன்னாள் கணவரிடம் மற்றொரு மகளும் இருந்து வருகின்றனர்.
மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். இதனிடையே பீட்டர் பால் உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரோபோ சங்கர் தம்பதிகளிடம் பேட்டி எடுக்கும்போது இந்திரஜா திருமணம் குறித்து பேசப்பட்டது. அப்போது, வனிதா சட்டென்று தனது மகள் ஜோவிகாவிற்கு தானே குழந்தை பெற்றுக் கொடுக்கப் போவதாகவும், படப்பிடிப்பிற்கு குழந்தை எடுத்து சென்று வளர்த்தால் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றால் தான் குழந்தையா என்ற கேள்வியும் எழுப்பி தனது மனதில் உள்ள விஷயத்தை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக, வனிதா எதையும் வெளிப்படையாகவும், பட்டென்று பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, தனது மகனுக்காக குழந்தை பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.