மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கமாக 16 பேருடன் தொடங்கும் பிக்பாஸ் இந்த முறை இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடங்க இருப்பதாக தெரிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரிய செல்வாக்கு இருந்து வருகிறது.
அது தொடர்களாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோக்களாக இருந்தாலும் சரி. மக்கள் விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் மிகப்பெரிய வெற்றி அடைந்த ஒரு ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக்பாஸ். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை ஒரு வீட்டில் 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்கள் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் பொருள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நட்பு, காதல், அழுகை, கோபம், கவலை, சிரிப்பு விளையாட்டு என அனைத்து கன்டெண்டுகளும் கிடைக்கும் இடமாக இருக்கிறது. இதனால் தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றியில் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அடுத்த நூறு நாட்களுக்கு கண்டன்டுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப் போவது விஜய் டிவி தான்.
சீசன் ஒன்று இரண்டு மூன்று ஆகிய மூன்றும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சீசன் 4 மற்றும் 5 அவ்வளவு ஆக வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் கொரோனா தான். கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் போட்டியாளர்களை சரியாக தேர்வு செய்ய முடியாமல் போனது. எனவே விஜய் டிவியின் பிரபலங்களை மட்டுமே அதிகபட்சம் வைத்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தியது பிக்பாஸ்.
இதனால் சீசன் 4 மற்றும் 5 மிகப்பெரிய தோல்வி அடைந்தது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி தளத்தில் நடந்த நிகழ்ச்சியும் தோல்வி அடைந்தது. எனவே இந்த முறை போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறது பிக்பாஸ் குழு. அதன்படி பல சர்ச்சையான போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸ் தொடங்க 4 நாட்களே இருக்கும் நிலையில் சில நாட்களாகவே போட்டியாளர்கள் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் குறிப்பாக வனிதாவின் முன்னாள் காதலர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
ஹோட்டலில் இருந்து அவர் இன்று ஒரு ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலமாக அவர் பிக்பாஸில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.