கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர், வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால், அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக் கூடியவர். இவரது, குணம் தான் வரலட்சுமிக்கும், இவரை நாம் ஆண் என்று அழைக்கலாம். இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது யாராவது சீண்டினால், அவ்வளவுதான் நடுரோடு என்று கூட பார்க்காமல் சண்டையிடுவார்.
மிகவும் தைரியமான பெண் இவர். வரலட்சுமிக்கு திருமணம் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருக்கு வயது 38 திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலாயிற்கு வயது 41 அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை தான் இவர் தற்போது செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவருக்கு இரண்டாம் திருமணம் ஆகும். சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் என்னடா பதினோரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க கல்யாணம் ஆகி பொண்ணுக்கு வயசு 15 ன்னு சொல்றீங்க எல்லா கணக்குமே இங்கு இடிக்குதே என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,
43 வயதானவரை இரண்டாம் திருமணம் செய்வது ஏன் என்ற கேள்வி வரலட்சுமி சரத்குமாரிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. அதில், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன் என்றும், இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுக்காக வாழுங்கள். இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுக்க பயணிக்க மாட்டார்கள் எனவும், நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்க போகிறீர்கள். அதனால், என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.