கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.
மேலும், இதையடுத்து ஒரு சில முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளார்களாம். இதையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே படத்தை காண தளபதி ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு இருங்கள்.
இந்த லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி சேர இருக்கிறார். அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.
அதனால் வெங்கட் பிரபு எங்கே சென்றாலும் அவரிடம் தளபதி 68 பற்றிய கேள்விகள் தான் கேட்கப்படுகிறது. இதனிடையே, சமீபத்திய ஒரு படத்தின் விழாவில் பேசிய வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 பட அப்டேட் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் “போகும் இடத்தில் எல்லாம் அப்டேட் கொடுத்துக்கொண்டிருந்தால் விஜய் தன்னை திட்டுவார் என்றும், முதலில் லியோ படம் வரட்டும் எனவும், அதற்கு பின் தான் தளபதி 68 அப்டேட்களை கொடுக்கிறேன்” என வெங்கட் பிரபு பதில் தெரிவித்து இருக்கிறார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.