இதற்குப் பிறகு விடுதலை 3 போன்ற படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சென்னை: விடுதலை 2 படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு Caib Award விருது வழங்கப்பட்டது. சென்னையில் இந்த விருது விழாவின் மேடையில் பேசிய வெற்றிமாறன், “எங்களுடைய குழுவினர் எல்லோருக்குமே விடுதலை ரொம்ப ஸ்பெஷலான படம். அதில் உழைப்பு, படிப்பு என நிறைய கற்றுக்கொண்டோம்.
ஒரு படத்தைத் தொடங்கும்போது நமக்கு ஒன்றை தெரிந்து கொள்வதும், அந்தப் படத்தை முடிக்கும்போது வேறு ஒன்றை புதிதாகக் கற்றுக்கொள்வதும் எப்போதாவது நடக்கும். அது இந்தப் படத்தில் நடந்தது. ஒரு இடத்தில் நான் இருக்கிறதாக எனக்கு உணர்த்தியது ‘விடுதலை’.
தனிப்பட்ட வகையிலும், நான் இந்தப் படத்தில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். உடல், மன உழைப்பு, அரசியல், தத்துவம், கருத்தியல் என நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். இதற்குப் பிறகு, இப்படியொரு படம் பண்ண முடியுமா, அது அமையுமானு தெரியல” என்றார்.
மேலும், வருடந்தோறும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிறந்த படம், சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு CHENNAI INSTITUTE OF EDUCATIONAL TECHNOLOGY & RESEARCH தரப்பில் CINEMA AT ITS BEST (CAIB) விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!
விடுதலை 2: தற்போது இதன் தொடர்ச்சியாக, 7ஆம் ஆண்டாக 2024ஆம் ஆண்டிற்கான CAIB விருதுகள் விழாதான் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை.
இளையராஜா இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, விடுதலை 2ஆம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில், மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
This website uses cookies.