விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.
நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
நானும் ரவுடி தான் படத்துக்கு பின் விக்னேஷ் சிவனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதே தவிர பெரிய அளவுக்கு புகழ் இல்லை.
இவர்கள் இருவரும் பல கோவில்களுக்கு சென்றனர். திருப்பதி கோவிலுக்கு செருப்பு அணிந்து கொண்டது சர்ச்சையானது. இவர்களை சுற்றி சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் தொடர்ந்தன.
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு நயன் தாயானார். அந்த சர்ச்சையும் ஒரு வழியாக ஓய்ந்தது.
பின்னர் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தை ஒடிடியில் வெளியட முயன்றார். டாக்குமெண்டரி போல இணையதளத்தல் வெளியிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து பணத்தை கொட்டி இரைத்த பிறகு அது தோல்வியில் முடிந்தது.
பின்னர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைந்து பரியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதை நன்றாக இல்லை என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் விக்கியை ஒதுக்கினர்.
ஒரு பக்கம் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி தோல்வியை தழுவின. இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இதையடுத்து ஒரு சாமியாரின் உதவியுடன் ஜோதிடம் பார்த்து இவர்கள் படும் துன்பங்களுக்கு காரணம் என்ன என்று கேட்ட போது, திருமணம் செய்த நேரம் சரியில்லை என கூறியுள்ளார்.
அதற்கு பரிகாரமாக இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக சமூக வலைளதளங்களில் தகவல் வெளியானது.
இதனிடையே, இந்த பிரச்சனையை விக்னேஷ் சிவனின் பெரியப்பா அன்றே கணித்து கூறியிருக்கிறார். அதாவது விக்னேஷ் சிவன் சரியான முகூர்த்த நேரத்தில் நயன் தாராவுக்கு தாலிக்கட்டவில்லை என்று பேட்டியொன்றில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா கூறியிருக்கிறார்.
குளிகை நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட்டாகும். அந்த நேரத்தில் தான் அவன் தாலிக்கட்டியிருக்கிறான் என்று முன்பே கூறியிருக்கும் செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.