தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, நானும் ரவுடி தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். நடிகர் அஜித்தின் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அது கை கூடி வரவில்லை.
இருந்தபோதிலும், அதை எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் தனது மனைவியான நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்து வருகிறார்.
இதனிடையே, விக்னேஷ் சிவனை அஜித் அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை இயக்க கமிட் செய்த நிலையில், விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு என்று பலவிதமான செய்திகள் வெளியானது.
தற்போது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் முதல்முறையாக அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தயாரிப்பாளருக்கு 2 ஆம் பாதியில் திருப்தி இல்லை என்பதாலும், தனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போது மகிழ்திருமேனி சார் மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல தனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். ஒரு ரசிகரா அதை நான் எஞ்சாய் பண்ணுவேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.