நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜுன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, இதையடுத்து கேரளாவுக்கு சென்று அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிபெற்றனர். இதையடுத்து சில நாட்கள் அங்கு ஓய்வெடுத்துவிட்டு, தற்போது இருவரும் ஜாலியாக கனிமூம் சென்றுவிட்டனர்.
அவர்கள் இருவரும் தற்போது தாய்லாந்துக்கு ஜோடியாக ஹனிமூன் சென்றுள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கான வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால், இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவ்வப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்கி.
அந்த வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இவர்களால் தான் தங்களது கல்யாணம் நல்ல படியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களது திருமண ஏற்பாட்டாளர்கள். எங்கள் திருமணத்தை ஆண்டாண்டுக்கும் நினைவுகூறத்தக்க ஒன்றாக மாற்றியதற்கு நன்றி என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.