தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்து பல விஷயங்களை பகிர்ந்தும் வருகிறார். இதில், விஜய்க்கும் லோகேஷ்க்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி கூறியிருந்தார். இதை சினிமா விமர்சகர் ஒருவர் பகிர அதை இயக்குனர் விக்னேஷ் சிவன் like செய்து அதன் பின்னர் அன்லைக் செய்துள்ளார்.
இதனை பலர் கடுமையாக விமர்சித்தும் விக்னேஷ் சிவனை விஜய் ரசிகர்கள் திட்டியும் வந்தனர். ஆனால், இதற்கு விக்னேஷ் சிவன் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டும், நான் லோகேஷ் கனகராஜ் பேட்டி என்ற ஒரே காரணத்தினாலும் அதில் நயன்தாரா புகைப்படம் இருந்ததாலும் அந்த பதிவினை சரியாக கவனிக்காமல் லைக் செய்தேன்.
நானும் லியோ படத்திற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார். இதனை கண்ட லோகேஷ் கனகராஜ் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்ட எக்ஸ் தளத்தில் ஜில் ப்ரோ என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.