தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் மிகச்சிறந்த நடிகருமான விஜய் ஆண்டனி தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது திரைத்துறையினரிடமும் அன்பாக பழகும் சாந்த குணமுடையவர். இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் ஹீரோவாக நான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகினார். இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர் இதில் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினர் மத்தியில் பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மீரா கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதற்காக அவர் கடந்த 6 மாத காலமாக சிகிச்சை எடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
அவர் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவி , மிகவும் திறமையானவர், தைரியமானவர், மேடைகளில் தைரியமாக பேசக்கூடியவர். பல கலைகளில் தன்னை ஈடுபடுத்தி திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி இருக்கும் மீரா என் தவறான முடிவை எடுத்தார் என்று அவரது ஆசியர்கள் மற்றும் நண்பர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மீரா தன் குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு `11 மணிக்கு தூங்க சென்றுள்ளார். சரியாக 3 மணியளவில் அவர் தூக்கிட்டு இறந்துள்ளார். அந்த கடைசி இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது? அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என பல கோணங்களில் போலீசார் விசாரித்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் தற்கொலை செய்யும் முடிவில் இருக்கும்போது கடைசி நிமிடங்களில் அங்கும் இங்குமாக நடந்திருப்பார், மனம் குமுறி அழுதிருப்பார். தனக்கு பிடித்த நபர்களை விட்டு செல்வதை நினைந்து ஆழ்மனதில் வருந்திருப்பார்கள். எண்ணங்கள் நிலையாக இருந்திருக்காது. படபடப்பாக எண்ணத்துடன் ஒரு வித குழப்பத்தில் மரணித்திருப்பார்கள் என மனநல ஆலோசர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அவரது அறையில் தூக்கம் மாத்திரைகள் கைப்பற்றியுள்ளனர் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி போன்ற நல்ல மனிதருக்கா இப்படி நடக்கணும் என அவர் வருத்தப்பட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.