தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
ஆனால், அவர்கள் அத்தனை பேரை காட்டிலும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது. ஆம், விஜய் ஆண்டனி மாலை அணிவித்து விஜயகாந்த் உடலை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அவரது முகத்திற்கு முத்தமிட்டு கண்கலங்கிப்படி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அந்த ஐஸ் பாக்சின் மீதிருந்த உதிர்ந்த பூ இதழ் ஒன்றை எடுத்து தன் சட்டை பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் அருகில் நின்று அழுதுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை பார்த்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறினார். விஜய் ஆண்டனியின் இந்த உணர்ச்சிமிக்க செயல் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரும் அவர் முத்தமிட்டதை பார்த்து கைதட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக எந்த ஒரு நடிகரும் இதுபோன்று செய்யவில்லை என பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.