கார் ரேஸ் வெற்றிக்கு முதலில் வாழ்த்து கூறியதே விஜய் தான் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா, தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், “கொஞ்சமும் ஆதாரம் இல்லாத தகவல் அது. அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதுமே விஜய் சாரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது. அதேபோல், அஜித் சாருக்கு விருது (பத்ம பூஷன்) அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது.
அவர்கள் இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. எனவே, விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார். தற்போது, இந்தச் செய்தி, விஜய் – அஜித்குமார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக, துபாயில் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி, 24H கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பாராட்டுக்களைக்குவித்தது. மேலும், வரும் அக்டோபர் வரை அஜித்குமார் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்து உள்ளார். அதன் பின்னர் நடிப்பில் இறங்குவார் என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அஜித்திற்கு விருது அறிவித்ததும், திரையுலகில் இருந்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், கார் ரேஸ் அணி வெற்றி பெற்றதும் அரசியல், திரைத்துறையினர் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த இருவெற்றியிலும், விஜய் அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கடிந்து வந்தனர்.
இதையும் படிங்க: உசுரே நீதானே.. அழைத்த பாலிவுட்.. மகிழ்ச்சியில் மகா கும்பமேளா மோனலிசா!
காரணம், விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் நடத்தி வருகிறார். அதேநேரம், எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதேபோல், விடாமுயற்சி என்ற திரைப்படம் அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.