ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியில்லாத அஜித் திரைப்படமாக அமைந்தது. ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மிகுந்த ஆவலோடு அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கையில் தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் தனது அரசியல் மேடையில் பேசி மிகப் பெரிய கைத்தட்டல் வாங்கிய வசனம்தான் “வாட் ப்ரோ”. இந்த நிலையில் இந்த வசனத்தை அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த வசனத்தை இடைவேளை காட்சியாக வைத்துள்ளார்களாம். இவ்வாறு விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல் விஜய் ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.