தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் பல வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர். அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுத்துப்பதில் திறமைமிக்கவர் இயக்குனர் மிஸ்கின்.
இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்ற மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர், எதார்த்தமான பேய் படங்களையும் திரில்லர் படங்களையும் எடுத்து பிரபலமானவர். மிஸ்கின் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். எப்போதும் மிஸ்கின் விழாக்களின் மேடையில் பேசும் போது சில சர்ச்சை கருத்துக்களோடு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
இதனிடையே, லியோ படத்தில் நடிகர் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் பத்திரிகையாளரிடம் தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் மிஸ்கின் விஜய்யை ஒருமையில் பேசியதாக கூறி தளபதி ரசிகர்கள் சார்பாக மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.