எவ்வளவு வயதானாலும் அப்பா அப்பா தான்.. அஜித் தந்தை மறைவு குறித்து விஜய் தந்தை உருக்கம்!!

தனது தந்தை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த அஜித்தின் தந்தை, திடீரென இன்று காலை காலமானார்.

இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இறுதிச்சடங்குகளுக்கு பிறகு, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தந்தை சுப்ரமணியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, நடிகர் அஜித்குமார் தரப்பில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எங்களது தந்தையார்‌ பி.எஸ்‌.மணி (84 வயது) அவர்கள்‌ பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில்‌ இருந்து வந்தார்‌. இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில்‌ உயிர்‌ நீத்தார்‌. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால்‌ பாதிக்கப்பட்டிருந்த எங்கள்‌ தந்தையை அன்போடும்‌, அக்கரையோடும்‌ கவனித்து வந்தும்‌, எங்கள்‌ குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும்‌ நாங்கள்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.

எங்கள்‌ தந்தையார்‌ சுமார்‌ அறுபது ஆண்டு காலமாக எங்கள்‌ தாயின்‌அன்போடும்‌, அற்பணிப்போடும்‌ ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்‌. இந்த துயர நேரத்தில்‌, பலர்‌ எங்கள்‌ தந்தையாரின்‌ இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும்‌, எங்கள்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ சொல்வதற்காகவும்‌ எங்களை தொலைபபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல்‌ அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்‌.

தற்போதுள்ள சூழலில்‌ எங்களால்‌ உங்கள்‌ அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில்‌ தகவல்‌ அனுப்ப இயலாதமையை நீங்கள்‌ புரிந்துகொள்வீர்கள்‌ என நம்புகிறோம்‌. எங்கள்‌ தந்தையாரின்‌ இறுதி சடங்குகள்‌ ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்‌. எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும்‌ எங்களுடைய துயரத்தையும்‌, இழப்பையும்‌ புரிந்துகொண்டு, குடும்பத்தினர்‌ துக்கத்தை அனுசரிக்கவும்‌, இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில்‌ செய்யவும்‌ ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்‌, எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இவருடைய, மறைவுக்கு ஏ.ஆர். முருக்தாஸ், ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர்கள் பிரசன்னா, மிர்ச்சி சிவா என பலரும் நேரில் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவர், அஜித் குமார் தந்தையின் மரண செய்தியை கேட்டு வருத்தமடைந்ததாகவும், எவ்வளவு வயதானாலும் அப்பா அப்பா தான் என்றும், அந்த இழப்பு மிகவும் இழப்பாகும் எனவும், தந்தையை இழந்து தவிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு மன ஆறுதலை தரும்படி இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

11 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

11 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

13 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

13 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

13 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

14 hours ago

This website uses cookies.