ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடலுக்கு நேற்றைய தினமே அஞ்சலி செலுத்திய அவர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.
இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் வருகையை நோக்கி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வரும் நடிகர் விஜய், இந்த முறை தூத்துக்குடி, நெல்லையை குறி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் தற்போது, அரசியல் என்ட்ரிக்காக ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து செய்து வரும் நிலையில், தற்போது நெல்லைக்கு சென்று அங்கு வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 1000 நபர்களுக்கு இந்த நலத்திட்ட உதவியை விஜய் செய்யவிருக்கிறார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.