ரசிகருக்கு லெட்டர் போட்ட விஜய்… தளபதியே நெகிழ்ந்துப்போன சம்பவம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தற்போது நடிப்பை தாண்டி அரசியலில் இறங்கி அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார். அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடிகர் விஜய்யே தனது கைகளால் சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையையும் வழங்கி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தனி ஒரு ஆளாக அரசாங்கம் செய்த சலுகை போன்று அவர் நடத்திய இந்த விருது விழா அரசியல்வாதிகளையே அசைத்துப்பார்த்தது. இதற்காக விஜய்க்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த விழாவிற்கு பெரும் பங்கு வகித்தவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் தான். எனவே தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈசிஆர் சரவணனுக்கு தனது கையால் கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக தாங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்ததாகவும், தங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து தான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி என்று நடிகர் விஜய் அந்த கடிதத்தில் தெரிவித்து பாராட்டியுள்ளார். விஜய் கைப்பட எழுதியுள்ள இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Shree

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

14 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

15 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

17 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

18 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

19 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

19 hours ago

This website uses cookies.