‘தல’னு சொன்னதும் கத்தி கூச்சல் போட்ட மாணவர்கள்: “நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க”.. கடுப்பான பிரபல நடிகர்..!

மாணவர்கள் கத்தியதால் கடுப்பான விஜய் சேதுபதி, தேவையில்லாம கத்தாதீங்க… நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க என கோபமாக கேட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிசியான வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.

இதனிடையே சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். ஏனென்றால் டைம் இருக்கு. இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும்போது அவன் எனக்கு நண்பனாகிறான். எல்லாத்துக்கும் டைம் கொடுங்க. உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல்ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள்.

இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளைய செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் வாயிலாக சண்டை போட்டுக்கலாம், அசிங்கமா பேசிக்கலாம்னு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க நம்பீடாதீங்க.

டெக்னாலஜி உங்கள திங்க பாக்குது. உங்கள பயன்படுத்த வைத்து மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம்னு பாக்குறாங்க. என்னெல்லாம் சாப்பிட வைக்கலாம். எதெல்லாம் சாப்பிட்டா நீங்க நோயாளி ஆகுவீங்க. நோயாளி ஆனா என்ன மருந்து சாப்பிடுவீங்க. எவ்ளோ நாள் நோயாளியா உங்கள கஷ்டப்பட வைக்க முடியும், உங்கள எப்படி ஆட்கொள்ளலாம் அப்டிங்குறதுல இந்த உலகம் ரொம்ப ஆர்வமா இருக்கு. நம்மள மயக்குவாங்க ஜாக்கிரதையா இருக்கனும்.

இவ்வாறு மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசிய விஜய் சேதுபதி, இறுதியாக

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”

என்கிற திருக்குறளை கூறினார்.

இதில் கடைசியாக அவர் தலை என கூறியதை கேட்டதும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, தேவையில்லாம கத்தாதீங்க… நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க” என கோபமாக கேட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

9 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

10 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

11 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

11 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

12 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

13 hours ago

This website uses cookies.