மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “மகாராஜா” படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக தொடர்ந்து கலக்கி வரும் நிலையில்,அவர் மீண்டும் பான் இந்தியா படமொன்றில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் ஹீரோ,வில்லன்,குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.தமிழ் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் ஷாருக்கானுடன் “ஜவான்” படத்தில் வில்லனாக நடித்தபோது,அந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இதனால்,பாலிவுட்டில் அவருக்கு அதிக வில்லன் கதாபாத்திரங்கள் வரும் நிலை உருவானது.ஆனால் “வில்லனாக மட்டும் பயணிக்க மாட்டேன்” என்ற முடிவோடு விஜய்சேதுபதி இருந்தார்.
இதையும் படியுங்க: எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பெரிய வரவேற்பு பெற்றது.இதன் வெற்றிக்கு பிறகு அவர் “ஏஸ்” மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் என தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார்.
இந்நிலையில்,தற்போது பிரபாஸ் நடிக்கும் “ஸ்பிரிட்” படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.இந்தப் படத்தை “அர்ஜுன் ரெட்டி” “அனிமல்” போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார்.இந்த பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தில்,வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.