வாரிசு நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் தேவயானியின் மகள்.. நீ வருவாயா படத்தின் 2-ம் பாகமாம்..!

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தேவயானியின் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். விஜயின் மகன் சஞ்சய் தான் இவருக்கு ஜோடியாகவும், நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இனியாவின் தந்தையும் இயக்குனர் ராஜ்குமார் அடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நீ வருவாயா படத்தில் முதலில் அஜித் விஜய் இணைந்து நடிக்க இருந்ததாம். ஆனால் விஜய் நடிக்காமல் போக அந்த கதாபாத்திரத்தில் பார்த்திபன் மற்றும் அஜித் நடித்துக் கொடுத்தார்களாம். இந்நிலையில், முதல் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திலாவது அவரது மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய்யிடம் நேரடியாக கேட்கப் போவதாகவும், இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

நீ வருவாயா இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டதாகவும், தற்போது வரை 10 பேரிடம் கதையை கூறி விட்டதாகவும், மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரம் மகன் கனிஷ்கா விக்ரம் என்றும் உறுதியாக இயக்குனர் ராஜகுமாரன் சொல்லியுள்ளார்.

Poorni

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

54 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

14 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

15 hours ago

This website uses cookies.