தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தீவிரமாக அரசியலில் இறங்க அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். விரைவில் அவர் அரசியலில் அடித்தளமிடவிருக்கிறார். இதற்காக சமூக நலன் சார்ந்த விஷயங்களை தன மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.
அந்தவகையில் அண்மையில் +2 , 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார்.
இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். .இந்நிலையில் 17ம் தேதி இன்று மாணவர்களை விஜய் சந்தித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் விழாவில் கலந்துக்கொள்வதற்காக விஜய் வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது வழியெங்கும் ரசிகர்கள் சூழ்ந்து அவரை ஆரவாரம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.