“அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்காக தான் சீரியல பாக்குறோம்” கோபியின் வீடியோவால் அதிர்ச்சியில் கமெண்ட் செய்த ரசிகர்கள்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இத்தொடரில் தற்போது கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

பாக்கியா – கோபி விவாகரத்து, கோபி – ராதிகா திருமண வாழ்க்கை, அம்ரிதா – எழில் காதல், பாக்கியாவின் புது பிசினஸ் என சுவாரஸ்யமாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், ஆங்கிலம் கற்பதற்காக பாக்கியலட்சுமி தனியாக வகுப்புக்கு செல்கிறார்.

அங்கு பிரபல நடிகரான ரஞ்சித் அவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இனிவரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி – ரஞ்சித் காட்சிகள் தான் அதிகம் வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பாக்கியலக்ஷ்மி சீரியலில் நான் 3 வருடங்களாக 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன். எனக்கு இது போதும். இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் இனி கோபியினுடைய காட்சிகள் குறைவாகவும் பழனிச்சாமி கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித் – பாக்கியலட்சுமி ட்ராக் தான் அதிகமாக வரப்போகிறது என சொல்லப்படுகிறது. சதீஷின் இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ‘அப்படி சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்’ என்று அந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

12 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

14 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

16 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

18 hours ago

This website uses cookies.