பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதில் கடந்த டிசம்பர் மாதமே நகை திருட்டு நடந்துள்ளது. பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்துள்ளது; வீட்டு பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரணை இறங்கிய போலீசார் நகைகளை திருமணத்தில் மனைவி தர்ஷாவின் குடும்பத்தினர் அளித்தவை என்று கண்டறிந்துள்ளனர். மேலும் லாக்கரை ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் தெரிந்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும், அப்படி கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசிய எண் தெரியும் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் ஏசுதாஸுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை பலமுறை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தும் பதில் அளிக்காமலும், சென்னைக்கு வராமலும் இருந்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் 11 நபர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலைக்காரர்கள் யாரும் நகையை திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே புகார் அளித்த விஜய் ஏசுதாஸின் மனைவியின் மீது சந்தேகம் எழுந்து போலீசார் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனாவை விசாரித்து வருகிறார்கள். மேலும் டிசம்பர் மாதம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நதிகள் பிப்ரவரி 30ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம் என்றும் கணவர் மனைவி கிடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நாடகமாடுகிறார் என்று சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதால் அவரை விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், VIP படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் விஜய் யேசுதாஸ் மனைவி ரகசிய தொடர்பில் இருந்ததாகவும், இதற்கு காரணம் தனுஷ் தான் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.