தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சூர்யா , சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய் என பல பிரபலங்கள் அவரின் நினைவிடத்தில் வந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
அந்தவகையில் தற்போது விஜயகாந்த் மரணத்தின் போது வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்ததால் வரவில்லை. இந்நிலையில் அங்கிருந்து திரும்பி வந்ததும் நடிகர் விஷால் தனது நண்பர் ஆர்யாவுடன் சேர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்போது, பத்திரிக்கையாளர், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு ஏன் நடிகர் சங்கம் முறையாக அஞ்சலி செலுத்தவில்லை? என கேட்டதற்கு, என்னால் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் இருந்தேன். “என்ன மன்னிச்சுடு சாமி” என்ற வார்த்தையை தவிர வேறு என்ன நான் கேட்பது’ என பதிலளித்தார். இந்த பதில் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு கோபத்தை தூண்டியுள்ளது. கோடி கணக்கில் பணம் வைத்திருக்கும் உங்களால் உடனடியாக ஒரு ரிட்டன் டிக்கெட் எடுத்து அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையா? இதெல்லாம் உலக மகா நடிப்பு என அவரை மோசமாக விமர்சித்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.