படக்குழுவுக்கு விஜய் போட்ட உத்தரவு.. பாதியில் நிறுத்தப்பட்ட G.O.A.T படப்பிடிப்பு!
பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து பவதாரிணி மறைவால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து தி கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், பாடகி பவதாரிணி மறைவு செய்தியை கேட்டவுடன் சகோதரர்கள் வெங்கட் பிரபு, யுவன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை புறப்பட்டுள்ளார். சகோதிரியை இழந்துவாடும் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு விஜய் ‘தி கோட் ‘ படத்தின் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துள்ளதாகவும் நிலைமை எல்லாம் சரியான பிறகு தொடங்கலாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பவதாரிணியின் உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருக்கிறது. அஞ்சலிக்காக முருகேசன் தெரு தி நகரில் உள்ள இருக்கும் இளையராஜா வீட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணியின் இறுதிசடங்கு நாளை காலை நடைபெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.