சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதாவது, அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழக வெற்றிக்கழகம் என தொடங்கியிருந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் அரசியலில் குதிக்க உள்ளதாக கூறினார். இதனிடையே, நடிகர் விஜய் தனது கட்சிக்காக ஒரு செயலியை உருவாக்கி உள்ளார். அதோடு அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
மகளிர் தினமான இன்று தனது கட்சியின் புதிய செயலியை அறிமுகப்படுத்திய விஜய் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், இது என்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை நான் எடுத்துவிட்டேன். பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின் தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள், அது உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் நீங்கள் விருப்பப்பட்டால் ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.