கடும் உழைப்புக்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் சேது படம் இவருக்கு புகழை கொடுத்தது.
தொடர்ந்து ஹிட் படங்களல் நடித்து முன்னணி ஹீரோவான விக்ரம், எத்தனை வயதை கடந்தாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இன்னும் இளம நடிகருக்கு போட்டியாக விளங்குகிறார்.
இவர் நடிப்பில் வீர தீர சூரன் 2 படம் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் வெளியாக உள்ள படத்திற்காக ப்ரேமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது. இது தொடர்பாக கேரளாவுக்கு சென்ற படக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுவாக விக்ரமுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அப்படி அவர் அங்கு சென்ற போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விக்ரமை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையறிந்த விக்ரம், அந்த ரசிகரை சந்தித்தார். அவர் எழுதிய வாசகங்களை படித்த விக்ரம், ரசிகருக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
இதையடுத்து அந்த ரசிகர், உங்க போ நம்பர் வேண்டும் என கூறியதையடுத்து, உடனே தனது மேனேஜரிடம் என்னோட போன் நம்பரை கொடுத்திருங்க, அப்படியே முதல் ஷோக்கான டிக்கெட்டையும் ஏற்பாடு பண்ணி கொடுத்திருங்க என அன்புக் கட்டளையிட்டார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் மட்டுமல்ல அவரது பெற்றோரும், அங்கு கூடியிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.