தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும்பவர் பா. ரஞ்சித். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.
சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் தங்கலான். இதன் title announcement வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் இப்படத்தில் பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. .
இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து கதாநாயகி மாளவிகா மோஹனன் விலகியதாக தற்போது சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது, அந்த கதாபாத்திரத்திற்கு மாளவிகா மோகனன் நடிப்பு சரியில்லாத காரணத்தினால் தான் படத்திலிருந்து இவரை இயக்குனர் பா ரஞ்சித் நீக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மாளவிகா மோகனனுக்கு பதிலாக ஹீரோயினாக வேறொரு நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.