இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் விமர்சித்து இருப்பதற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது Body shaming, Sexist மனநிலையில் உச்சக்கட்டம் எனவும், இதனால் தான் வினுஷாவை இவர்கள் மோசமாக நடத்துகிறார்களா? கமல் ஹாசன் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என சனம் ஷெட்டி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணதை கூட மன்னிச்சிடுவேன். ஆனால், இதனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா அப்படினு பேசிட்டு, பாடி ஷேமிங் பண்ணி இருக்கான். எனக்கு வெளியே வந்ததும் அதிர்ச்சியை தான் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
உருவகேலி செய்ததற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், நிக்சன் சொன்னது பொய். வீட்டிற்கு வந்ததும் தான் அவன் இப்படியெல்லாம் பேசியது தெரிந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மன்னிப்பு கேட்டதால் நல்லவனாகிவிட முடியாது எனவும், என்னை கேலி செய்தது நிச்சயம் ஜோக் கிடையாது என்று Bully கேங்கிற்கு சொல்கிறேன் எனவும், உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள், எனக்காக குரல் கொடுத்த விச்சுவுக்கு நன்றி என்று சரமாரியாக கேள்வி நடிகை வினுஷா கேட்டு உள்ளார்.
.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.