கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் பாலியல் புகார்கள் தொடர்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக நடிகர் விஷால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசியபோது அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைக்கும் நபர்களை பெண்கள் தைரியமாக அந்த இடத்திலேயே அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அதை அடுத்த நடிகர் விஷாலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நடிகைகள் பலரும் விஷாலின் இந்த பேச்சுக்கு விமர்சித்து வந்த நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு இது குறித்து பேசி இருக்கும் நடிகர் விஷால்…ஒருமுறை மலேசியாவில் திரைப்படச் சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம்.
அந்த நிகழ்ச்சிக்கு நடிகை அமலாபால் சென்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் அமலா பாலிடம் நைட் டின்னருக்கு ரூமுக்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார். இதைக் கேட்டு கொந்தளித்துப் போன நடிகை அமலா பால் அந்த மேனேஜரை அங்கேயே அந்த இடத்திலேயே அடித்து துவைத்து விட்டார்.
உடனடியாக அங்கிருந்தபடியே என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கினார். உடனடியாக நான் அதற்கு ஆக்ஷன் எடுத்தேன். நான் கார்த்தியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னேன். பிறகு அந்த மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அடுத்தடுத்து உடனடியாக செய்தோம்.
அப்படியான உடனடியாக நடவடிக்கைகள் தான் இங்கு தேவைப்படுகிறது. முதலில் யாராவது உங்களில் அப்படி தவறாக அணுகும் பட்சத்தில் பெண்கள் தயவு செய்து செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். புதிதாக திரைத்துறைக்கு இளம் பெண்களுக்கு நான் ஒன்றே ஒன்றுதான் சொல்லுகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரியான பாலியல் தொந்தரவுகள் இருந்தாலும் என்னிடம் முதலில் வந்து உடனடியாக சொல்லுங்கள் அதற்கான தேவையான நடவடிக்கைகள் நான் எடுக்க தயாராக இருக்கிறேன் என விஷால் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.