தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு தங்கை, ஹீரோவுக்கு தங்கை என குணசித்திர வேடங்களில் நடித்தே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மனம் கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது.குறிப்பாக நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்த சரண்யா மோகன் மிகப்பெரும் அடையாளத்தை தேடிக்கொண்டார்.
இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் எதுவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடல் எடை கூடியிருந்த சரண்யா மோகன் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். காரணம் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். நாட்டியம் ஆடுவதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதற்காக தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் ஜிம் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடன் யோகா, வாக்கிங் என ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில், சரண்யா மோகன் அளித்த பேட்டியில், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாரா அக்காவுடன் நான் நடித்திருந்தேன். அவங்க நிஜத்தில் ரொம்ப அன்பா இருப்பாங்க, எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருந்தது. அதற்கான ஷூட்டிங் இப்போது நான் தான் முதன்முறையாக அவர்களுடன் அறிமுகமானேன். அதற்குப் பிறகு வெண்மேகம் பாடலுக்கு ஷூட்டிங் கொண்டிருந்தபோது, ஆனாலும் ஷூட்டிங் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நான் அங்கே போய் இருந்தேன். அப்போது, என்னுடைய காட்சிகளை முடித்து விட்டு நான் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
அதனால, நயன்தாரா என்ன ஆச்சு என்று கேட்டார். நான் எனக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று சொன்னேன். அங்கிருந்த ஒரு சேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தபோது, உடனே நயன்தாரா அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு நயன்தாராவின் கேரவேனில் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டார். அதோடு, சரண்யாவின் காட்சிகள் எப்போது வருகிறதோ அப்போது மட்டும் அவங்க வெளியே வந்தால் போதும், அதுவரைக்கும் அவர்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று அங்கிருந்த எல்லோரிடமும் சொல்லிவிட்டார்.
இப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால், எனக்கும் அவர்களுக்கும் பெரிய அளவில் அறிமுகமே கிடையாது. ஒரு சில சாட்ஸ் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். ஆனாலும், அவர் நடந்து கொண்ட விதம் இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் சரண்யா மோகன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.