பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விக்ரமன், அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வேடமணிந்து ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சர்ச்சை பேச்சு பேசுபொருளானது.
மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, இது தொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விக்ரமனின் மனைவி இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “நாங்கள் இதற்கு முன்பு தங்கியிருந்த குடியிருப்பில் ஷூட் சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்க வேண்டியிருந்தது. நான் வெளியூரில் இருந்தபோது எடுத்த வீடியோ அது. நான் ஒரு படம் எடுக்கிறேன்.
அதில் நடிப்பதற்காகத்தான் அவரை இது போன்ற வீடியாவை எடுத்து தரச் சொன்னேன். ஆனால், அந்த வேடத்தில் அவரைப் பார்த்தவர்கள் திருநங்கை என்று நினைத்துக் கொண்டு தாக்கிவிட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் செய்ததுதான் குற்றம். அவர்கள் மீது தான் தவறு இருக்கிறது.
இதையும் படிங்க: யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!
அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது சம்பந்தமே இல்லாமல் பிரச்னையாக மாற்றி உள்ளார்கள். அந்த வீடியோவை தேவையில்லாமல் பகிர்ந்து அவதூறு பரப்பி உள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கத்தான் காவல் நிலையம் வந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.