சினிமா / TV

மும்பை போனதுக்கு இத்தனை கதையா? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சூர்யா – ஜோதிகா தம்பதி மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து இருவரும் வித்தியாசமான காரணங்களைக் கூறுவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே, சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் படங்களில் படுபிஸியாக நடித்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் மும்பைக்கு குடும்பமாக குடி பெயர்ந்து விட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில், மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “எங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்.

சென்னையைக் காட்டிலும் மும்பையில் அதிகப்படியான சர்வதேசப் பள்ளிகள் இருப்பதால்தான் நாங்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்” எனக் கூறியுள்ளார். அதேநேரம், தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு குடிபெயர்ந்ததாக ஜோதிகா கூறியுள்ளார்.

இதனால், இதில் எது உண்மை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் உடன் ஜோதிகாவுக்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளதாலேயே சூர்யா – ஜோதிகா தம்பதி மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுவதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: மைக் புலிகேசியா நானு? வருண்குமார் ஐபிஎஸ் பாணியில் சீமான் பதில்!

காலில் விழுந்த ஜோதிகா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், சூர்யா கமிட் ஆகியுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க, அவர் வளர்க்கும் காளையையும் சென்னையில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்று வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஜோதிகா நடித்துள்ள Dabba Cartel என்ற இந்தி வெப் தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடரில் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதனிடையே, நேற்று நடைபெற்ற இதன் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சபானாவின் கால்களைத் தொட்டு ஜோதிகா ஆசி பெற்றது வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

16 minutes ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

2 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

4 hours ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.