தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மைனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை சூசன் ஜார்ஜ்.
இதையும் படியுங்க: கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!
இவர் திரையுலகில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் குறித்துமூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ளார்.
அதில்,சூசன் மைனா படத்தில் ‘எப்போ வர்றீங்க?’ என்று கணவரை கடுமையாக கட்டுப்படுத்தும் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
சூசன் ஜார்ஜ் மைனா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு,ஒரு திரையரங்கிற்கு சென்றிருக்கிறார்.அப்போது திரையில் அவரை அரிவாளால் வெட்டப்படும் காட்சி வந்ததும்,சில ரசிகர்கள் “வெட்டு நல்லா வெட்டு!” என்று ஆவேசமாகக் கூச்சலிட்டார்களாம்.படம் முடிந்த பிறகு,வெளியே வந்த சூசனை அடையாளம் கண்ட சிலர்,”உன்னையும் அப்படித்தான் வெட்டியிருக்கணும்..கணவர் வேலைக்கு போனால், இப்படியா டார்ச்சர் செய்வது?” என கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவம் சூசனுக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்ததோடு,அவரை சினிமாவிலிருந்து விலக செய்ய காரணமாக இருந்தது.
மேலும் அவரிடம் சிலர் “மேடம், நீங்க உண்மையிலேயே மது அருந்திக்கொண்டு நடிப்பீர்களா? திரையில் அப்படித்தான் தெரிகிறது!” என கேள்வி கேட்டுள்ளனர்,இதனால் அவர் மிகவும் மனம் உடைந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
நீண்ட காலமாக சினிமாவால் இருந்து விலகி வந்த இவர்,தற்போது கும்கி 2-ல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஒன்றில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.