தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.
இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பிரபல நடிகர் விஷால் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு எண்டு போட்டுவிட்டு அடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் இப்படத்தில் தரமாக நடிக்க விஜய் முடிவெடுத்துள்ளார். அப்படியிருக்கும்போது விஜய் விஷால் இயக்கத்தில் எல்லாம் நடிப்பாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஒருவேளை விஜய் அரசியலில் பின்னடைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்து விஷால் இயக்கத்தில் நடிப்பார் என ட்ரோல் செய்து வருகிறார்கள்.
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
This website uses cookies.