படுக்கைக்கு அழைத்து படாத பாடுபடுத்திய இயக்குனர்… அதுவும் அம்மாவிடம் – குமுறிய யாஷிகா!
Author: Rajesh2 January 2024, 9:39 am
முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேசிய யாஷிகா ஆனந்த், நான் அப்பாவாக நினைக்கும் பெரிய தமிழ் ஹீரோ ஒருவர் என்னை ஆடிஷனுக்கு அழைத்து ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு என்னை சிறிது நேரம் வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு என் அம்மாவை அழைத்து “உங்கள் மகள் யாஷிகா படுக்கைக்கு சம்மதித்தாள் இந்த வாய்ப்பு இப்போவே தயாராக இருக்கிறது என்றார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினேன்.
அவரின் பெயரை நான் வெளியிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நான் வெளியில் சொல்லவில்லை. என் வாழ்க்கையில் இதே போல் வேறொரு சம்பவமும் நடைபெற்றது. ஆம் ஒரு போலீஸ்காரர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். பின்னர் நான் புகார் கொடுத்ததில் அவர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளர்.