கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அப்படி அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் அவரை காண ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள்.
அவர் கூட்டத்தை பார்த்து கையசைத்தாலே மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விஜயாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக வர வேண்டும் என்று ரசிகர்களும், தேமுதிகவினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேப்டன் தற்போது எப்படி இருக்கிறார். ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் யோகி பாபு.
கெத்தா கூலிங் கிளாஸ் அணிந்து கேப்டன் அமர்ந்திருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த வானத்தை போல மனம் படைத்த பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார் யோகி பாபு.
அந்த வீடியோவில் விஜயகாந்த் சிரித்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, கேப்டனை சந்தித்த வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அந்த குழந்தை சிரிப்பு இருக்கே. அதை தான் மறக்க முடியவில்லை.
அவர் சிரிப்பதை பார்த்து தானாக கண் கலங்குகிறது. சர்க்கரை நோயால் கால் விரல்களை அகறறிவிட்டார்கள். அதனால் வீட்டோடு இருக்கிறார் பாவம் அனைவருக்கும் தன் சொந்த பணத்தில் உதவி செய்பவர் கேப்டன். தங்க மனசுக்காரர். இந்திய சினிமாவின் நிஜமான ஹீரோ கேப்டன் தான் என தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.