விடாமுயற்சி படத்தில் அஜித்தின் லுக் தொடர்பான நெட்டிசனின் பதிவிற்கு, நடிகர் பார்த்திபன் அளித்த பதில் பேசுபொருளாக மாறி உள்ளது.
சென்னை: “என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி.தரணி போற்றும் தனிப்பெரும் Style-க்குரியவர் AK. incomparable style-க்கு சொந்தக்காரர், கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட, சில இயக்குணர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக” என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு, “இது லியோ பார்த்திபன், நடிகர் பார்த்திபன் இல்லை” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், சில முக்கிய காரணங்களால் தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், விடாமுயற்சி ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, அதில், அஜித் ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைவது போலவும், அங்கு பல வில்லன்கள் அஜித்தைப் பார்ப்பது போலவும் ஒரு காட்சி காண்பிக்கப்படுகிறது. அதில், நீளமான முடி கொண்ட ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு அஜித்தை பார்ப்பது போன்ற காட்சி ஒன்று உள்ளது.
இதையும் படிங்க: பெரியாரின் ஈரோட்டில் எடுபடுமா நாதக? திமுகவே ஒப்புக்கொண்ட இருமுனைப் போட்டி.. சூடுபிடித்த தேர்தல் களம்!
இதனால், விடாமுயற்சியில் அஜித் இரட்டை வேடங்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இதில் காட்டப்படும் அஜித்தின் லுக், லியோ படத்தில் விஜயின் பார்த்திபன் கதாபாத்திரத்தைப் போன்று உள்ளதாக நெட்டிசன் ஒருவர் போட்டோ உடன் பதிவிட, அதற்கு நடிகர் பார்த்திபன் மறுபதிவு செய்திருப்பதே தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.