திரைத்துறையில் நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும், கதைக்கு என்ன தேவையோ, அதையே தாங்கள் செய்து வருகிறோம் என நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி பகுதியில் உள்ள பிரபல தங்க நகை விற்பனை நிறுவனம், சர்வதேச வைர வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் திரைப்பட நடிகை அதுல்யா ரவி புதிய வடிவமைப்பிலான வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெரும்பாலான பெண்களுக்கு வைரம் பிடிக்கும் எனவும், எந்த ஒரு விழா என்றாலும் வைர நகை அணியும் போது பெண்கள் ராணி போன்று இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தனது நடிப்பில் இதுவரை இரண்டு, மூன்று படங்கள் வெளியாகி உள்ளதாகவும், தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், தமிழிலும் தான் நடித்த ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது, எனவும் கூறினார்.
மேலும், நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது எனவும், கதைக்கு எது தேவையோ, அதை மட்டுமே செய்து வருகிறோம் என கூறியதுடன், திரைப்படங்களில் நடிகைகளின் நிறத்தில் எந்த பாகுபாடும் இல்லை எனவும், நல்ல கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும், எனவும் குறிப்பிட்டார்.
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
This website uses cookies.